Search

கவிதையின் கிறுக்கல்

வெறும் எழுத்துக்கள் அல்ல! உணர்வுகள்!!

வேறென்ன வேண்டும் எனக்கு ????

இனி என்ன புதுமை என்று என்னும் மனநிலையால் ,
வெகு தூரம் கடந்து விட்டோம் …
கோடி கோடி அறிமுகங்கள் ..இருந்து என்ன பலன் ????
உண்மையான நட்பின் எண்ணிக்கை கையில் அடங்கிவிடும் ..
நின்று யோசிபதற்கான சில நிமிடங்கள் இவைதான் ..
எண்ணி பார்த்தேன் நான் இருக்கும் இடம் யாருடையதென்று !!!
எண்ணத்தில் வரவில்லை , எனது படிப்பு ..
மனதிற்கு எட்டவில்லை எனது உழைப்பு …
அன்பின் கரம் ஒன்று என்னை வாழ்த்தி !!
பறந்து செல் …உன் மனம் சொல்லும் வழியில் என்று கூறவே ..
தொடங்கியது இந்த பயணம் ..
தூண்டில் மீனாய் தவிக்கும் இந்த இதயம் ..
தேடுகிறது உந்தன் கரங்களை ..
அம்மா !!
எதிர்பார்புகளை தொலைத்து விட்டு ..
உன்னுள் குடியேற மனம் துடிக்கவே ..
ஏற்றுகொள் உந்தன் கரம் கொண்டு ..
உன் புன்னகைக்காக நான் ..என் புன்னகையால் நீ !!
என்றிருக்க ஆசை ..
ஏற்றுகொள் என்னை ..உன் கருவில் மீண்டும் ..
ஆயுள் வரம் கேட்பேன் ..என்னை விடுவிக்க வேண்டாம் என்று ..

உனக்காக மட்டும்!!

newtamilpoems.wordpress.com
Newtamilpoems

எதோ ஒரு ஏக்கம் வந்து என்னுள் நடை போடுதே ..
கண்கள் அது தூங்கவில்லை ..
உன்னையே மனம் தேடுதே !!
கனவிலும் , நினைவிலும் உன்னுடன் நான் வாழவே ..
இருளென இருந்த என் இதயம் ஒளி வீசிடுமே ..
உனக்கென மண்ணில் தோன்றியதாக என்னுள் ஒரு உற்சாகம் …
பிரிந்திட இங்கு நீயே நினைத்தாலும் ..
கனவிலே நான் வாழ்ந்திடுவேன் ..
ஒவ்வொரு நிமிடமும் உன்னுடன் நான் இருக்க ,
உயிரனுகளெல்லாம் ஏங்கி தவிக்க ..
எங்கோ நீ ..இங்கு நான் ..
உன் தீண்டலில் உயிர் பெருமா என் காதல் ..
விடை தெரியாமல் போனால் ….
இருந்திடுமோ இந்த பெண்மை மண்ணில் ..
உன்னால் உருவான மாற்றங்களையும் ,
உனக்காக உருவெடுக்கும் இந்த பெண்ணின் மனமும் …
யுகம் யுகம் தாண்டி மண்ணில் நிலைத்திட!!!
வேண்டும் உன் கரங்கள் ..

எவ்வாறு உணர்திடுவேன் என் காதலை????

Newtamilpoems

 

உன்னை தீண்டும் காற்றை கூண்டில் சிறை செய்வேன் ,
உன் கண்கள் கூசும் வெயிலை என் நிழல் கொண்டு தடை செய்வேன் ..
உன் முகம் காட்டும் கண்ணாடியின் கண்களுக்கு என் விழிகள் கொண்டு திரை செய்வேன் ..
உன்னை என் இமைகளுக்குள் பூட்டிவிட ஆசை ..
இமைகள் மூடும் போதும் நீ என்னுள் இருபதற்கு!!!
காவியம் படைத்திட இது கற்பனை காதல் அல்ல ..
என்னை உன்னிடம் தொலைத்து விட்டு தடுமாறும் என் இதயத்திற்கும் உன் புன்னகைக்கும் உள்ள காதல் ..
உன்னிடம் ஒழி வீச மெழுகென உரிகிட ஆசை ..
அதில் ஒழி வீசும் உன் முகம் கண்டு பெருமிதம் கொள்ள!!!
உன் நினைவின்றி வாழ இயலும் ….
என் உயிர் என்னை பிரிந்தால் மட்டும் ..

புன்னகையில் ஒரு கோடி இன்பங்கள்

கள்ளம் இல்லா உன் புன்கையின் பின்னணியில் எனது சந்தோசம் ..
சிறு விரல் தொடுகையில் உள்ளூரும் ஒரு இன்பம் …
வார்த்தைகள் இல்லை அதை வடிவமைக்க ..
அறியாமையால் நிறைந்திருக்கும் உந்தன் குணம் ..
அதை எண்ணி வருந்திடாதது உன் மனம் ..
நீ நடந்திட கண்டு ..மகிழ்வின் உச்சத்திற்கு நான் செல்ல ..
இரவிலும் தூங்காமல் ரசிக்கிறேன் உன் அழகை …
உலகிற்கு அறிமுகமாகி ஒர் இரு மாதங்களில் ..
வாழ்நாள் முழுவதும் நான் தேடிய இன்பத்தை
உன் ஒரு புன்னகையில் தந்து சென்றாய் !!
உன்னை போல் நான் இருந்த நொடிகளை என்னால் நினைவு கொள்ள இயலாது ..
உன்னால் உருவான இனிமையான தருணங்களை நினைவில் இருந்து அகற்றவே முடியாது ..
வயதின் வரம்பும் ….அனுபவத்தின் எல்லையும் ..மறக்க வெய்தது உந்தன் குறும்புகளால் ..
உன்னருகில் உறங்கும் பொழுது …என்னுள் தோன்றிடும் எண்ணம் ..
விடியலே வேண்டாம் என்று …
உன் குழந்தை பருவம் உன் வாழ்வில் ஒரு அங்கம் ..
என் வாழ்வில் நீ தருகின்ற கள்ளம் இல்லா இன்பம் ..
எவ்வுயரம் சென்றாலும் உன் பின்னல் உன் தாயக நான் இருப்பேன் …
உன் புன்னகையை ரசித்திட ..

உனக்காக காத்திருப்பேன் .. மண்ணில் உள்ளவரை …

உன்னால் உண்டான கனவுகள் என்னில் உயிர்கொண்டு வாழ ..
உன்னை விட்டு எவ்வாறு நான் வாழ்ந்திடுவேன் ??
பூக்களாய் மாறிட மொட்டுகள் காத்திருப்பது போல!
உன் புன்னகையாய் மாறிட என் எண்ணங்கள் காத்திருக்க ..
எங்கே சென்றுவிட்டாய் என்னை பிரிந்து ???
இரவினை காண நிலவு காத்திருப்பது போல !!
இமைத்திடும் உன் கண்களின் இடையே குடியேற நான் காத்திருக்க …
ஏன் அழித்துவிட்டாய் உன் கண்ணீரால் என் காதலை ..
இனிமையை காண இளமை காத்திருப்பது போல ..
உன் இதயத்தின் இடம் எனக்கென்று எண்ணி நான் இருக்க ..
என்னை மறந்து ஏன் பறந்தாய் விண்ணில் ..
சுகங்களை காண சோகங்கள் காத்திருப்பது போல..
உன் நிழலென மாறிவிட நான் காத்திருக்க …
என்னை இருளில் தள்ளிவிட்டு ஏன் மறைந்தாய் என் காதலை ..
உன்னால் என்னுள் உருவான காதலுக்கு தாயக நான் இருப்பேன் ..
என்னை விட்டு சென்றது நீ …
நம் காதல் அல்ல ..
காத்திருப்பேன் காலம் முழுவதும் ..
உனக்காக காத்திருப்பேன் ..
மண்ணில் உள்ளவரை!!

பயம்!!!

உன்னை என்னும் சில தருணங்களில்..
வாழ்கையின் முக்கிய முடிவுகள் பிரகின்றன ..
உன்னை மறந்த சில தருணங்களில் ..
வாழ்கை பாடம் கற்பிக்கின்றன ..
தனிமையின் பயத்தினால் திருமணம் …
முதுமையின் பயத்தினால் குழந்தைகள் ..
வறுமையின் பயத்தினால் உழைப்பு ..
அறிவின்மையின் பயத்தினால் கல்வி ..
இருளின் பயத்தினால் ஒளி ..
உறக்கத்தின் பயத்தினால் கனவுகள் …
ஆசையின் பயத்தினால் பணம் ..
செலவுகளின் பயத்தினால் சேமிப்பு ..
யார் கூறியது ..
அழிவது பயத்தால் என்று ??..
உலகம் என்னும் உன்னத படைப்பின் பின்னே ..
பயம் எனும் கருவியே செயல்படுகிறது ..
அதற்கு சாட்சி ..!!
தன்னை நம்பிட பயந்து ..
கல்லை கடவுளாய் வேண்டிடும் மனிதனின் எண்ணங்களே!!!

அன்பின் எதிர்பார்ப்பு!!!

வாழ்வின் சிறந்த இடம் உனதருகில் எனக்கென்று ஓரிடம் ..
வாழ்கையின் சிறந்த அர்த்தம், என்னால் உருவாகும் உனது புன்னகை ..
இவை இரண்டால் என் நாட்கள் இனிமையாக காத்திருக்கிறேன்..

காதலின் ஆதிக்கம்!!!

இமைத்திடும் என் விழிகள் தரும் இடைவெளியை வெறுக்கிறேன்…..
உன்னை நினைத்திருக்கும் நொடிகளில் ஒரு நொடியை செலவிடுவதால்!!

என்ன சொல்லி விழுகிறதோ மழை துளி ..?????

newtamilpoems

சிறு துளிகளால் இயன்றவை என்னெனவோ ??
வாய் மொழி இல்லை நான் பேச ..
எவ்வாறு உணர்திடுவேன் என் எண்ணங்களை ??
விடை இன்றி தவித்திடும் மழை துளி ..!!!!!
உன் மௌனங்களில் நான் உணர்ந்த சில ரகசியங்கள் ….
“இலையின் நுனியில் நீ தீண்டும் நொடியில் ,
காதலை சொல்லி விழுகிறாய் என எண்ணினேன் ..!!
மலர்ந்திருக்கும் பூவினை நீ தீண்டும் பொழுதில் ..
வெட்கத்தின் அர்த்தம் சொல்லி விழுகிறாய் என எண்ணினேன் ..!!
வறண்டிருக்கும் மண்ணை நீ சந்திக்கும் பொழுதில் …
வறுமையை நீக்கிட வழி சொல்லி விழுகிறாய் என எண்ணினேன்..!!
விண்ணில் இருந்து நீ வரும் வழியில் ..
பிரிவின் அர்த்தம் சொல்லி விழுகிறாய் என எண்ணினேன்..!!
தனிமையில் நடந்திடும் நண்பரோடு நீ இருந்த பொது ..
துணையின் முக்கியத்துவம் சொல்லி விழுகிறாய் என எண்ணினேன்…!!
காற்றோடு நீ இணைந்து வரும் வழியில் ..
கண்ணீரை மறைத்திடும் வழி சொல்லி விழுகிறாய் என எண்ணினேன்..!!
எண்ணிய அனைத்திலும் உனது இருப்பு ..
எதை சொல்லி விழுகிராயோ மழை துளி ..??
பேசாத வார்த்தைகளின் அர்த்தம் புரிவதில்லை ..
உன் மௌனமோ அர்த்தங்களின் பிறப்பிடமாக அமைந்தது என் ..?
கண்கள் மூடி நீ சொல்வதை கேக்க எண்ணினேன் ..
இயலவில்லை உன் அழகினை ரசிதிடாமல் இருபதற்கு ..
உறவாட சிறந்த தோழியாக நீ இருக்கையில் ..
தனிமை என்ற சொல் அகராதியில் இனி இல்லை ..
எழுதிடுவேன் புது அகராதியே ..
நீ என்ன சொல்லி விழுகிறாய் என்பதற்காக …
என்ன சொல்லி விழுகிறதோ மழை துளி ..?????
வியப்பில் நான்!!!!

Blog at WordPress.com.

Up ↑