நொடியினில் மயங்கிடுவேன் உன் விழி வீசிடும் வலையினிலே,
மயக்கங்கள் தெளிந்திடவே வேண்டாம் என வரம் கேட்பேன்!
தயக்கங்கள் நீங்கி ..தன்னை மறந்த நிலை அடைந்தேன் உன் மெய் தீண்டலில்…
நொடியினில் துயர் நீக்கும் உன் புன்னகையில் கண்டிடுவேன் ஒரு கோடி கனவுகள் ..
விடியல் வேண்டாம் என்று எண்ணிய நாட்கள் அனைத்தும் உன்னோடு சேர்ந்திட்டது.
கொடியில் பூக்கும் மலர் போல காத்திருக்கும் காதலை துடிக்கும் உன் இதயத்திற்கு மாலையாய் சூட்டுவேன்!
ஒரு கையில் அமிர்தமும் …ஒரு கையில் புனிதமும் ..கொண்டு செய்த புன்னகையே ….
அமிர்தமும் வேண்டாம் …ஆயுளும் வேண்டாம் ..
ஒரு நாள் உன் மடியில் துயில் கொண்டால் போதும் .
இறுதி பக்கம் என்று நான் திருப்பிய புத்தகம் நீ!
முடிவுரையாய் தேடிய எனக்கு, தொடக்கமென அமைந்து விட்டாய்.
என் முடிவுரையோ உன் கரங்களால் எழுதப்படும்…