நண்பரே,
முயன்றபின் முடியாதது ஏதும் உண்டோ??
ஆணாக இருப்பின் பதிலை சற்று யோசித்தே வெளியிடு ..
பெண்ணின் பார்வையால் அவள் மனதை புரிய முயற்சித்து பார் !!
ஆணாக நீ தழுவும் முதல் தோல்வி அதுவே ஆகும் ..
உன் எண்ணங்கள் கொண்டு, நீ வீசும் பார்வையால் ..
தீட்டப்படும் ஓவியமே பெண்ணின் கண்கள் ..
ஓவியத்தின் உரிமையாளன் நீயே ஆனாலும் ..
உயிர் கொடுக்கும் உரிமையோ பெண்ணின் உணர்வு தான் ..
காதலா? நட்பா ? அவள் பார்வை கூறுவது என்னவோ ??
நட்பாக இருப்பின் ..உன் கண்கள் ,
அவள் கண்களை கண்டே உரையாடும் ..
காதலாக இருப்பின் .. உன் கண்கள் ,
அவள் கண்களை நோக்கிட இயலாமல் தவித்தே மன்றாடும் ..
மாற்றங்கள் காட்டுவது உன் கண்களோ உன் உணர்வுகளோ அல்ல ..
உனக்கான இடம் தரும் அந்த பெண்ணிடமே ..
கண்களை கொண்டே பதில் பேசிடும் பெண்களே ,
ஆண்களுக்கான தெளிவுரை தந்தமைக்கு
மன்னிப்பு கூறி நான் ..
January 3, 2019 at 5:05 am
Perfect #truelines #congrats
LikeLike
August 29, 2019 at 5:42 pm
ஆழமான வரிகள்
அருமை சகோதரி
LikeLike