விழித்திடும் போதும், கண் உறங்கிடும் போதும்
நான் காண என் அருகில் காத்திருப்பாய்
முழு மதியை போல!
உயிர் கொடுத்து, உணர்வு கொடுத்து, உறவுகள் கொடுத்து,
உறங்காமல் பாதுகாத்தாய் இந்த மண்ணில் நான் வாழ …
கனத்த உள்ளதோடு நான் நின்ற போதெல்லாம்,
கண்ணீர் துடைத்து, கரம் நீட்டினாய் ஒரு தேவதையை போல,
நீ தொடா உயரத்தை, நான் தொட வேண்டும் என்று,
தலை நீவி அனுப்பிவைத்தாய் விடுதிகல்லூரிக்கு.
பிரிவென்னும் சொல்லின் அர்த்தம் அறிந்ததே,
உன்னை பிரிந்த அந்த சில காலத்தில் தான்.
புதிதாய் பல உறவுகள் வந்தபின்பும்,
மாதம் தவறா சந்திப்பிற்கு ஏங்கியே கிடந்தது என் மனம் !
ஆயிரம் நல்லவைகள் நீ கற்றுக்கொடுத்தாய்,
உன் கனவுகளை நான் வாழ சுதந்திரம் கொடுத்தாய் !
திறமையுடன் வாழ வேண்டும் என அறிவுரையும் கொடுத்தாய்,
என்ன கிடைத்தாலும், எண்ணாதவை கிடைத்தாலும்…
நான் உன்னை போல ஒரு பெண்ணாகத்தான் வாழ விரும்புகிறேன் அம்மா !
May 9, 2019 at 10:11 am
Woww sowmiaa really awesome 😍😍😍👍👍👏👏👏
LikeLike
June 9, 2019 at 10:02 am
Nice word akka
LikeLike
July 20, 2019 at 5:43 am
I think the first time I reading a poem on motherhood from a girls perspective,…this was really beautiful, positive , inspirational..all things expressed very fluently..more than the literature the thoughts expressed are really beautiful… உன் போன்ற பெண் ஒருவர் போதும் இவ்வுலகில் , வாழ்க்கை பசுமையாக….😊😊😊
LikeLike
September 12, 2019 at 8:02 am
Semma
LikeLike