யார் வரைந்த ஓவியமோ!
உன் புன்னகையால் வர்ணம் தீட்ட படுகிறது …

யார் இழைத்த பிழையோ!!
உன் நெஞ்சினால் காதல் செய்ய படுகிறது …

எந்த சலங்கையின் முத்தோ!!
உன் முத்தத்தால் உயிரில்
சங்கம படுகிறது ..

கார்காலத்தில் சிந்திய துளி ஒன்று,
கயல்விழியில் நில்லாமல் …
இதழ் கடந்து …
கரம் தழுவி ..
உன் உயிரில் கலந்திடவே ஆசை படுகிறது …

கருநீல மேகங்கள் சிந்தாத ஒளியனைத்தும் …
கண்ணனது கண்கள் காட்டிடவே …
மெய் சிலுற்கும் நொடியெல்லம் மெய் சிலுர்து நின்றிடுமே …
நினைவுகளிலும் நீயே வேண்டும் .
என் நித்திரையிலும் நீயே வேண்டும் …
என்னை மறந்திடவே
உன்னை நினைவாய் கொண்டேன் …

உன்னுள் வாழ்ந்திடுவேன் …உன்னை அறியாமல் உன்னை அள்ளி செல்லவே …
சென்றபின் சேர்த்திடுவேன் …உன்னால் நான் இழந்த சுயநினைவோடு …

ஏக்கத்துடன் …
உன் அருகே ஒஅர் இடம் வாங்க காத்திருப்பேன் ..
உலகின் இறுதி நொடியின் வரை …காதலோடு ..