Tamil poems

60 வயது ஆனபின்பும் , ஆறு ஏழு தலைமுறை பார்த்தபின்பும் ,
சுகம் துக்கம் சுவைத்த பின்பும் ,
சோர்வின்றி உழைத்த பின்பும் ,
கோடிகளை கண்டா கரம் இருப்பினும் ,
காதலில் வென்று தோற்று , தோற்று வென்ற , வாழ்வு இருப்பினும்!
தாய் முகம் தேடியே விடியும் காலை பொழுதுகள்,
10 மாதங்கள் இருளில் சுகம் கண்டோம்,
உலகம் அறியும் வரை, உலகமென அவளையே சுற்றி வந்தோம்..
பணியில் நாம் பசி மறந்து போக,
நாம் பசியால் அவள் உன்ன மறந்து போவாள் ,
எதை சொல்ல , எதை மறக்க ..
காலம் கடந்து போகும் வழியில்,
உன்னை கடந்து போக எண்ணிய மனம் …
திசை அறியாமல் தேடி செல்கிறோம் ,
புது புது வாழ்வை,
மறந்துவிட வேண்டாம், வாழ்வு தந்த ஒரு உயிரை …
அம்மா !