தருணங்கள் நிறைந்த நாட்கள் அனைத்தும் நினைவில் இருபதில்லை ..
நினைவிலிருக்கும் தருணங்களை உருவாக்கிடும் நபர்கள் விரைவில் கிடைபதில்லை ..
நீ !!
கனவில் வந்து , கரங்களில் ஏந்தி , விடிந்தபின் கலைந்திடும் நிழலா?
கூந்தல் கோதி காதல் சொல்லும் உன் விரல்கள் என்ன, மாயமாய் மறைந்திடும் தென்றலா?
இமைகள் மூடிய நேரத்தில், மனக்கதவை திறக்கும் உன் புன்னகை என்ன தேய்ந்திடும் நிலவா ?
என் வாசல் தேடி வந்த உன் பாதங்கள் என்ன தண்ணீரில் களைந்து போகும் எழுத்துகளா?
உதிர்ந்து கிடக்கும் இலையில் கூட உன் முகம் உணர்வேன் ..
கண்ணா , காதலை உணர்ந்திட நீ அருகில் தேவை இல்லை ..
நீ என்னுள் விட்டு சென்ற பாத சுவடுகளே போதும் ..
என்னை உன் பாதை கொண்டு சேர்த்துவிடும் ..
என்னை நீ பிரிந்தாலும் , உன் நினைவுகள் என்னும் வரம் கொண்டு வாழ்வேன் ..
உன் புன்னகையை நீ பறித்து சென்றாலும் ..
அதற்காக காத்திருக்கும் செடியாக உயிர் கொண்டிருப்பேன் ..
உன் வார்த்தைகளை அழித்து சென்றாலும் ..
மௌனத்திலே உன்னோட பேசிகொண்டிருபேன் ..
நான் வேண்டுவதெல்லாம் ஒன்று தான் ..
என்னை நீ விட்டு சென்றாலும் ..
என் கவிதைகளை அனாதை ஆக்கி செல்லாதே ..
உனக்கென மட்டும் பிரதிபலிக்கும் என் வார்த்தைகளையும்
உன்னை மட்டும் நம்பி வாழும் என் கவிதைகளையும் ..
அனாதை ஆக்கிவிடாதே …