விடியலை கண்டபின்பும் , விளங்காத பல கனவுகள் ..உன்னால் தானோ ?

ஓர் உயிர் கொண்டு வாழும் உயிரிங்களின் மத்தியில்
உந்தன் உயிரையும் சுமந்து வாழ்ந்திடவே எனக்கிந்த பிறவியோ ?

கண்ணின் மணியில் வந்தமர்ந்த உன்னை , கண்ணீரில் கரைய விடுவேனோ ?

மடிமேல் தலைவெயத்து உறங்கும் உனக்கு …என் மூச்சை தாலாட்டாய் நான் தருவேனோ ?

கிறங்கி கிடக்கும் எந்தன் நினைவுகளை , புதுபித்திட உன் கரங்கள் தான் ஆயுதமோ ??

இவ்வுலகில் ஒரு தனி உலகம் உண்டெனில் அது உன் கண்கள் தானோ ?

என் கேள்விகள் எதுகைஆனல் , உன் பதில்கள் மோனை ஆகுமோ ??

உன்னில் என்னை காண , உனக்காக என்னை காண ,
காதல் தான் வழியெனில் ,
இன்றே இறந்திடுவேன் , காதலின் மடியில் .!!!